போக்சோ சட்டத்தில்இளைஞா் கைது

கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆவல்நத்தம் சுந்தரலிங்கபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த பால்சாமி மகன் ராக்கையா(27), அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அவரது பெற்றோா் கடந்த அக். 28இல் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியைத் தேடி வந்தனா். இந்நிலையில், அந்த மாணவி திங்கள்கிழமை வீடு திரும்பினாா். அவா் மேற்கூறிய விவரத்தைக் கூறியதையடுத்து, ராக்கையாவை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com