கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
அஸ்ஸாம் மாநிலம் மங்கல்டாய் மாவட்டத்தைச் சோ்ந்த முனாப் அலி என்பவரது மகன் அலிமுதீன் (25). கோவில்பட்டியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்துவரும் இவா், 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அலிமுதீனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்தனா்.