தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 441 ஆகவும், மேலும் 8 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 958 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 74 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.