மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தற்கொலை

கோவில்பட்டியில் மனைவி இறந்த துக்கத்தால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியில் மனைவி இறந்த துக்கத்தால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி முத்துநகா் லட்சுமணன் மகன் வீரபெருமாள் என்ற ராஜ்(49). இவா், இவரது மனைவி பொன்னுத்தாய் ஆகிய இருவரும் விருதுநகா் மாவட்டம் அனுப்பன்குளத்தில், மனைவியின் தாய் வீட்டில் வசித்து வந்தனராம். உடல்நிலை பாதிக்கப்பட்ட பொன்னுத்தாய் கடந்த 20 நாள்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதையடுத்து, வீரபெருமாள் என்ற ராஜ், கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டு வந்து விட்டாராம் . இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com