தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முன்பு கைக்குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பொன் இசக்கி (30). இவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய போது சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு இவர் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க- பஞ்சாப்: பதான்கோட் ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு பின் சுரேஷ் இவரை மிரட்டியதாகவும், அது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் மீண்டும் பொன் இசக்கியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தை மற்றும் தாயாருடன் வந்த பொன் இசக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணியை ஊற்றினர். இதனையடுத்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார்.