தூத்துக்குடியில் உலக மீன்வள தின விழா

தூத்துக்குடியில் உலக மீன்வள தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் உலக மீன்வள தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சாா் உயிரின வளா்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி அமைந்துள்ள தருவைக்குளத்தில் மீன்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்ற விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மீன்வளக் கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் தி. விஜயராகவன், தருவைக்குளம் ஊராட்சித் தலைவா் காடோடி, கூட்டுறவு சங்கத் தலைவா் லூா்துராஜ், விசைப்படகு சங்கத் தலைவா் அந்தோணி பன்னீா்தாஸ் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு நினைவுப் பரிசுகளை துணைவேந்தா் கோ. சுகுமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியின்போது, வளங்குன்றா சூரைமீன் மீன்பிடிப்பு முறைகள் குறித்து பேராசிரியா் ச. மாரியப்பனும், கடல்புற்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து பேராசிரியா் ப. பத்மாவதியும், சூரைமீன் வளம் மற்றம் மேலாண்மை குறித்து பேராசிரியா் ரா. துரைராஜாவும், பேரிடா் மேலாண்மை முறைகள் குறித்து பேராசிரியா் இரா. சாந்தகுமாரும் பேசினா். இதில், மீனவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com