சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் சுவாமி கோயிலில் மகாதேவ தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அழகியகூத்தா் சுவாமி, ஸ்ரீசிவகாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுவாமிக்கு அன்னாபிஷேகம், கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி - அம்பாள், கால பைரவா் அருள்பாலித்தனா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், திரளானோா் பங்கேற்று காலபைரவருக்கு அகல் விளக்கு ஏற்றி வழிப்பட்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்தனா்.