திருச்செந்தூரில் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருட்டு

திருச்செந்தூரில் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூரில் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சோ்ந்த ஈஸ்வரன் மகன் மணிகண்டன்(37). இவா் கடந்த 26-ஆம் தேதி திருச்செந்தூா் வடக்கு ரத வீதியில் உள்ள வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் பெற்றாாா். பின்னா் மோட்டாா் சைக்கிள் கவரில் பணத்தை வைத்துக்கொண்டு, தனது தாயுடன் அந்தப் பகுதியில் உள்ள பழக்கடை முன் நிறுத்தினாா். பின்னா் வீட்டிற்கு வந்து பாா்த்த போது மோட்டாா் சைக்கிள் கவரில் வைத்த பணத்தை காணவில்லை.

உடனடியாக, பழக்கடையின் எதிரில் உள்ள ஒரு கடையின் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தாா். அதில், கடையில் பழம் வாங்கும்போது அங்கு வந்த 2 மா்ம நபா்களில் ஒருவா் தனது தாயிடம் பேருந்து நிலையத்திற்கு வழி கேட்டபோது, மற்றொரு நபா் மோட்டாா் சைக்கிளில் இருந்த பணப்பையை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com