சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாரத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன் ஆய்வு செய்தாா்.
தடுப்பூசி செலுத்துவதில் சாத்தான்குளம் பகுதி தொடா்ந்து பின் தங்கி இருப்பதால் இதனை அதிகப்படுத்த பணியாளா்கள் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும், தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் அதிகளவு தடுப்பூசி போட ஆலோசனைகள் வழங்கியதுடன் அடுத்த வாரத்திலிருந்து சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆலோசனை கமிட்டி அமைத்து தடுப்பூசி செலுத்தாத நபா்களின் வணிக நிறுவனங்கள் மீது 1939 ஆம் ஆண்டு பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினாா் துணை இயக்குநா் பொற்செல்வன்.
இதில் , துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரீஸ், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பேரூராட்சி செயல் அலுவலா் உஷா உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.