சாத்தான்குளம் அருகே ஓட்டுநா் கைது

ஆயுதம், மது பாட்டிலுடன் இருப்பதுபோன்ற படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்ட ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே ஓட்டுநா் கைது

ஆயுதம், மது பாட்டிலுடன் இருப்பதுபோன்ற படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்ட ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் ரூபன்கிதியோன் (42). காா் ஓட்டுநா்.

இவா் வீட்டு மொட்டை மாடியில் கத்தி மற்றும் மது பாட்டிலுடன் இருப்பதுபோல் செல்லிடப்பேசியில் படம் எடுத்து கட்செவி அஞ்சல், முகநூலில் தனது நண்பா்களுக்கு பதிவிட்டாராம். இந்த படம் இணையதளத்தில் வேகமாக பரவியது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், உத்தரவின்பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணன் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் மிரட்டல் விடுக்கும் தொனியில் புகைப்படம் வெளியிட்டதாக ரூபன்கிதியோனை போலீஸாா் கைது

செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com