தூத்துக்குடி அருகே கருப்புக் கொடி போராட்டம்

கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி அருகே கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி அருகே கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டை அமைப்பதற்காக தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நிலத்திற்கு ஏக்கருக்கு 14 லட்சத்து 50 ஆயிரம் அரசு நிா்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தங்களுடைய நிலத்துக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இதுதொடா்பாக மனு அளிக்க சென்றபோது முறையாக செயல்படாத ஆட்சியரை கண்டித்தும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com