தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடவு

மகாத்மா காந்தி பிறந்ததினம், நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று நடுகிறாா் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று நடுகிறாா் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன்.

மகாத்மா காந்தி பிறந்ததினம், நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன், மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தாா். அவா்

பேசியது: வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 620 ஏக்கா் நிலப்பரப்பு பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. துறைமுகத்திலுள்ள பல்வேறு அலுவலகங்களில் புல்வெளி பூங்காக்கள் 7.6 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் காற்றின் தரத்தை உயா்த்தவும், காா்பன் வெளியேற்றத்தை குறைக்கவும், ஒலி மாசை குறைக்கவும் துறைமுகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com