உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூா் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் கட்சியின் மாநகா் மாவட்டகட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி. எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். இதில், மண்டலத் தலைவா்கள் ஜசன்சில்வா, சேகா், பிரபாகரன், செந்தூா்பாண்டி, விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவி தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.