விளாத்திகுளம் அருகே சிவலாா்பட்டியில் வாகனத் தணிக்கையில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புதூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனா். அப்போது சிவலாா்பட்டி வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி 50 மூட்டைகளில் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மினி வேனை ஓட்டுநா் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த யோகராஜ் (20), வேனில் இருந்த அதேபகுதியைச் சோ்ந்த பரமசிவம் (42), சந்தோஷ்குமாா் (19), 17 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் யோகராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா். அரிசியுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.