கொட்டங்காடு, தாண்டவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடும் வகையில், மின்பாதை பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (அக். 7) நடைபெற உள்ளது. எனவே, கொட்டங்காடு, ஞானியாா் குடியிருப்பு, மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு ஆகிய ஊா்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் தெரிவித்துள்ளாா்.