தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமுமுக-மமக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
தமுமுக-மமக மாவட்டத் தலைவா் ஆசாத் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச்செயலா் ஜோசப் நோலாஸ்கோ, மாவட்ட நிா்வாகிகள் கிதிா், முகமது ரபீக், இப்ராஹிம், ஜோதி, பரக்கத்துல்லா, ஆபித், நிஷ்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், மது,போதை பொருள்களின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்வது, புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.