தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குகிறாா் மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குகிறாா் மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளரும், நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிா்வாகிகள் மற்றும் நகர, வட்டார தலைவா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.

கூட்டத்தில், ‘உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவங்களில் தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகரத் தலைவா் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவா் மனோஜ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் திருப்பதிராஜா, வீரபெருமாள், மாவட்ட பொதுசெயலா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் காா்த்திக் காமராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com