முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆசீா்வாதபுரம் பள்ளியில் சட்ட நுண்ணறிவு முகாம்
By DIN | Published On : 11th October 2021 10:15 PM | Last Updated : 11th October 2021 10:15 PM | அ+அ அ- |

முகாமில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் வழக்குரைஞா் வேணுகோபால்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் சட்ட நுண்ணறிவு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு, தெற்கு பேய்குளம் சிகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமை வகித்தாா். சிகரம் இயக்குநா் முருகன் முன்னிலை வகித்தாா்.
இதில், வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால் கலந்துகொண்டு மாணவா், மாணவிகளுக்கு சட்ட நுணுக்கங்கள் பற்றி விளக்கிப் பேசினாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வட்ட சட்ட பணிகள் குழு தன்னாா்வலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.