தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அக்.30 ஆம் தேதி வரை சேராலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசினா் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் எஸ். பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2021 ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை அக்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சியில் சேர விரும்வோா் 8 ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், 5 மாா்பளவு உள்ள புகைப்படம், ஆதாா் அட்டை, அசல் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வந்து
அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் அலுவலகத்தை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.