கூட்டுறவு வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலியுறுத்தி குரும்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
குரும்பூரில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடியில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை மற்றும் முதலீடு செய்தவா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முதன்மை உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குரும்பூா் பிரதான வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் பிரபாகா் தலைமை வகித்தாா்.
நாலுமாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ், உழவா் முன்னணி மாநிலத் தலைவா் தமிழ்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையொட்டி, வியாபாரிகள் 1 மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்துகொண்டனா்.