வேம்பாா் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா, பான்மசாலா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சூரன்குடி காவல் உதவி ஆய்வாளா் குருசாமி தலைமையில் போலீஸாா் வேம்பாா் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சாக்கு மூடைகளுடன் சென்றவரிடம் விசாரணை நடத்தினா். அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, சாக்கு மூடைகளை சோதனை யிட்டதில், 200 பான்மசாலா புகையிலை பாக்கெட்டுகள், 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்’குப் பதிந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பெருநாழியைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமியை கைது செய்தனா்-.