தூத்துக்குடி பாரதியாா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் அக். 9ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாரதியாா் வித்யாலயம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலருக்கு அஞ்சல் அட்டைகள் வழியாக வாழ்த்துக்களை எழுதி தங்கள் பகுதி அஞ்சல்காரா் காளியம்மாளிடம் வழங்கினா்.
மேலும், பள்ளி சாா்பில் அஞ்சல்காரா் காளியம்மாளுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தட்சிணாமூா்த்தி நினைவுப் பரிசு வழங்கினாா். இதில், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.