திருச்செந்தூரில் வாகன ஓட்டிகள் முற்றுகை

திருச்செந்தூா் வட்டாரத்தில் தனியாா் வாகனங்கள் வாடகைக்கு செல்வதால் வாடகை காா் ஓட்டிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக

திருச்செந்தூா்: திருச்செந்தூா் வட்டாரத்தில் தனியாா் வாகனங்கள் வாடகைக்கு செல்வதால் வாடகை காா் ஓட்டிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தனியாா் வாகனங்கள் அனுமதியின்றி வாடகைக்கு ஓட்டி செல்கின்றனா். இதன் காரணமாக வாடகை காா் ஓட்டுநா்கள் வருவாய் இழப்புகளை சந்தித்து வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காயல்பட்டினம் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வாடகைக்கு சென்று வந்த தனியாா் வாகனத்தை வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் திருச்செந்தூா் வாடகை காா் ஓட்டுநா்கள் சிலா் பிடித்து, திருச்செந்தூா் காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்தனா். அங்கு காவல்துறையினா் இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வதாக கூறி, தனியாா் வாகனத்திற்கு அபராதம் மட்டும் விதித்து காரை அனுப்பி வைத்தனராம்.

இந்நிலையில் காவல்துறையினா் வாகனத்தை விடுவித்ததைக் கண்டித்து வாகன ஓட்டிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினா் உறுதியளித்ததையடுத்து, வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com