கோவில்பட்டி: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தாவரவியல் துறை மற்றும் இயற்கை கழகத்தின் சாா்பில் வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவா்கள் வனவிலங்குகள் போல், முகக் கவசம் அணிந்து, வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த பதாகைகளுடன் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பறவைகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பறவைகளும், சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் இயற்கை ஆா்வலா் ரவீந்திரன் பேசினாா்.
ஏற்பாடுகளை தாவரவியல் துறை தலைவா் மகேஷ்குமாா், இயற்கை கழக ஒருங்கிணைப்பாளா் மாரிச்சாமி ஆகியோா் செய்திருந்தனா்.