விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருச்செந்தூா்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் உள்ள குரங்கண்தட்டு, நத்தக்குளம், கோயில்விளை, காந்திபுரம், திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையில் உள்ள தண்ணீா்ப்பந்தல், நரசிங்கன்விளை, திருச்செந்தூா் - நாகா்கோயில் செல்லும் சாலையில் உள்ள மேலமானாடு ஆகிய கிராமங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நிற்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி செயலா் ராஜ்குமாா், கருத்தியல் பரப்பு மைய மாநில துணைச் செயலா் தமிழ்க்குட்டி, மாவட்ட அமைப்பாளா்கள் மு.தமிழ்ப்பரிதி, வேம்படி முத்து, வனவளவன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் தமிழ்ச்செல்வி, முத்து, இளையராஜா, அரிச்சந்திரன், திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் செஞ்சுடா், தென்திருப்பேரை நகரச் செயலா் அய்யப்பன், உடன்குடி ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன், திராவிட தமிழா் கட்சி அமைப்புச் செயலா் சு.கா.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com