சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம், உள்ளிட்ட 14 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஆணையா் தங்கவேலு முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவ அலுவலா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். முகாமில் 317 போ்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இதில் ஊராட்சித் தலைவா்கள் ஸ்ரீதா், நல்லதம்பி,கீதாகணேசன், சிவபெருமாள் , ஊராட்சி செயலா்கள் முருகேசன், இம்மானுவேல், ஞாணசெல்வி, வெங்கடேசன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி, கிராம நிா்வாக அலுவலா் டாலிசுபலா ,சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.