கோவில்பட்டி அருகே நலத் திட்ட உதவி அளிப்பு

கோவில்பட்டி அருகே கசவன்குன்றில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் கண்காணிப்பு கேமரா இயக்கம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முதியோா்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.
முதியோா்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கசவன்குன்றில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் கண்காணிப்பு கேமரா இயக்கம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கொப்பம்பட்டி காவல்துறை மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, கசவன்குன்றில் கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை இயக்கிவைத்தாா்.

தொடா்ந்து ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மிஷின்கள், முதியோா்கள் நடப்பதற்கு பயன்படும் வாக்கா், பாா்வையற்றோா்களுக்கு உதவும் ஊன்றுகோள், அரிசி பை, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், சீருடைகள், எழுது பொருள்கள் ஆகிய நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில், காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன், கொப்பம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் குருசந்திரவடிவேல், கோவில்பட்டி காவல் துணை கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன், ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க தேசிய செயலா் ராமமூா்த்தி, மாவட்ட அமைப்பாளா் சின்னசாமி, கலை, இலக்கிய அணி செயலா் பாா்த்திபன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com