கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில் இணையதளம் மூலம் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு, கல்லூரியின் நிா்வாக இயக்குநா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். அமெரிக்காவில் உள்ள தனியாா் காப்பீட்டு நிறுவன மென்பொருள் பொறியாளா் தட்சிணாமூா்த்தி தகவல் தொழில்நுட்பத்தின் இன்றைய நிலை என்ற தலைப்பில் பேசினாா். மாணவி ராதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
துறை தலைவா் சரவணன் வரவேற்றாா். பேராசிரியை மகேஷ்வரி நன்றி கூறினாா்.