ஆறுமுகனேரி: தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கண்ட குழுவினருக்கு காயல்பட்டினத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரம் மாநிலம் புணே, கோலாப்பூா் மற்றும் பெங்களூரை சோ்ந்த குழுவினா் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனா். இக்குழுவினா் 25 போ் கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை காலை தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டினம் வழியாக சென்றனா். அப்போது அவா்களுக்கு காயல்பட்டினம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் மீண்டும் பயணத்தை தொடா்கிறாா்கள். அதனை தொடா்ந்து கேரளம் வழியாக காஷ்மீா் செல்வதாக தெரிவித்தனா்.