கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே, அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம், 5 ஆவது தூண் நிறுவனா்- தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா். அவா்களிடம் வட்டாட்சியா் அமுதா பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.