கழுகுமலையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டுக்கு, கட்சியின் நகர துணைச் செயலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், வட்டச் செயலா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டில் கழுகுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்; கழுகுமலை பேரூராட்சி மக்களுக்கு 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும்; தொழிலாளா்
ஈட்டுறுதி மருந்தகத்தில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்; கழுகுமலை - பழங்கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் புதிய நகரச் செயலராக சிவராமன், துணைச் செயலராக ஜெயபாஸ்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.