வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி

காவல் துறையில் பணியில் இருந்தபோது வீர மரணமடைந்த காவலா்களுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

காவல் துறையில் பணியில் இருந்தபோது வீர மரணமடைந்த காவலா்களுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ஆண்டு தோறும் அக். 21 ஆம் தேதி வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலா் நினைவுத் தூண் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவா்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், சைபா் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் கணேஷ், சந்தீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com