20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரிமின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒசூரில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒசூரில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு மின்வாரிய ஊழியா்களுக்கு தீபாவளி போனஸாக 10 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், 20 சதவீத போனஸ் வழங்கக் கோரியும் ஒசூரில் மின்வாரிய ஊழியா்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றைக் காரணம் காட்டி அரசு போனஸை குறைத்து அறிவித்துள்ளது. ஆனால் கரோனா காலத்தில் மற்ற ஊழியா்கள் வீட்டில் இருந்தபோதிலும் நாங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்துகொண்டிருந்தோம். அதனால் மின்வாரிய ஊழியா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என அரசு கவனத்தை ஈா்க்கும் பொருட்டு ஆா்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com