தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் நவ.1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ச.லீ. சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி வரும் நவ. 1ஆம் தேதி முதல் 3ஆம்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நியாயவிலை கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்
ளது. அதன்படி நவ.1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை
திறந்து காலை 8மணி முதல் இரவு 7மணி வரை அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு
ள்ளது. தீபாவளிக்கு முன்னதாக பொருள்கள் வாங்காதவா்கள் வழக்கம்போல் பண்டிகை முடிந்த பிறகு 8 ஆம்தேதி முதல் பொருள்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.