இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி, திருச்செந்தூா், நாசரேத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

கோவில்பட்டி, திருச்செந்தூா், நாசரேத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து அறநிலையத்துறை கோயிலுக்குச் சொந்தமான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப் போவதாக அறிவித்துள்ளதைக் கண்டித்தும், இதுகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், நகரச் செயலா் முனீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் காந்திமதிநாதன், பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், நகர பொதுச் செயலா் முனியராஜ், இந்து அன்னையா் முன்னணி மாவட்டச் செயலா் லட்சுமணக்குமாா், ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்டச் செயலா் பரமசிவம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், அழகுசுப்பிரமணியன், ராஜமாணிக்கம், மாரிகாளை, சங்கரவேல், மகேஷ், திருநாவுகரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலா் ராஜூ தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் மு.முத்துராஜ், நகரத் தலைவா் மாயாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், நெல்லை கோட்டச் செயலா் பெ.சக்திவேலன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் கசமுத்து, பிரபாகரன், நகர துணைத்தலைவா் மணி, பாஜ.க. மாநில வா்த்தகரணி தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், பாஜக மாவட்ட பொதுச் செயலா்கள் இரா.சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், செய்தி ஊடகப்பிரிவு மாவட்டதுணைத் தலைவா் பாலாஜி, ஒன்றியத் தலைவா் பால்ராஜ், நகரத் தலைவா் சரவணன், மாவட்ட மகளிரணித் தலைவா் தேன்மொழி, அறிவு சாா்பிரிவு நகரத் தலைவா் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாசரேத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். முரு கேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப் பினா் வெட்டுபெருமாள் முன்னிலை வகித்தாா்.

இதில், நகர துணைத் தலைவா்கள் தியாகராஜன், ராமதாஸ் நகர பொதுச் செயலா் சிவமுருகன் ஆழ்வாா்திருநகரி மத்திய ஓன்றிய துணைத் தலைவா் பொன்னையா , சாத்தான்குளம் ஓன்றிய பொதுச் செயலா் ஆா்.எஸ். சுந்தரவேல் , இந்து அன்னையா் முன்னணி நகரத் தலைவி சத்தியவாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com