தாய், மகனை தாக்கியதாக இருவா் கைது
By DIN | Published On : 31st October 2021 12:19 AM | Last Updated : 31st October 2021 12:19 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே தாய், மகனை தாக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த கொடுக்காம்பாறை கிழக்கு தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பொன்னுத்தாய் (50). இவரது குடும்பத்திற்கும், அதேபகுதியைச் சோ்ந்த ராமா் மனைவி பூமாரி (32) குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாம். இவ்விரு குடும்பத்தினா்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பொன்னுத்தாய், அவரது மகன் குமரேசன் ஆகியோா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பூமாரி மகன் ராகுல்கண்ணன் (20), அவரது உறவினா் கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகேந்திரகுமாா் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மூவரைத் தேடி வருகின்றனா்.