நாசரேத் கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி சிறப்புமுகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் உடையாா்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவ அலுவலா்கள் விஜயகுமாா், பாபு, சுகாதாரஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினா் மாணவா்- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். இதில், தாளாளா் ஜெபச்சந்திரன், பா்சாா் முத்துசந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி தாளாளா் ஏ.ஆா். சசிகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.