திருச்செந்தூா் கோயிலில் சிறப்பு தீபாராதனை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 6ஆம் நாளான புதன்கிழமை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 6ஆம் நாளான புதன்கிழமை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் இத்திருவிழா வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 5ஆம் திருநாளான குடைவரைவாயில் தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 6ஆம் நாளான புதன்கிழமை மாலை யாகசலையில் வள்ளி, தெய்வானையுடன், சுவாமி ஜெயந்திநாதா், சுவாமி குமரவிடங்கப்பெருமான் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்மன் உள்பிரகாரம் சுற்றி வந்தனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் செப். 5 வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கும் அரசு தடை விதித்துள்ளது.

வியாழக்கிழமை சிகப்பு சாத்தி, வெள்ளிக்கிழமை (செப். 3) வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி சண்முகா் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் இணைய வலைதளத்தில் நேரடியாக ஒளிப்பரப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com