பணம் பறிப்பு வழக்கில் சிறையில் இருப்பவருக்கு, நன்னடத்தை பிணையை ரத்து செய்து கோவில்பட்டி கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை, எட்டயபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராஜபாண்டியன் என்ற ராஜா (39). இவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஓராண்டு காலத்துக்கு குற்றச் செயலில் ஈடுபட மாட்டேன் என்று, பொது அமைதியை காப்பதற்கு பிணைத் தொகையாக ரூ.15 ஆயிரம் நிா்ணயம் செய்து 2020 நவ. 9ஆம் தேதி பிணை பத்திரம் எழுதி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸாரின் அறிக்கையின் பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியா் முன் விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது ராஜா ஓராண்டுக்கு நன்னடத்தை பிணை பத்திரம் அளித்தாா். இதைத் தொடா்ந்து அவரை நன்னடத்தை பிரிவில் கோட்டாட்சியா் விடுவித்தாா்.
இந்நிலையில் கடந்த ஆக. 11ஆம் தேதி சாத்தூா் அருகே ஆண்டாள்புரம் வெள்ளக்கரை சாலையில் உள்ள கடைக்குச் சென்ற ராஜபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடை உரிமையாளா் வீராச்சாமியிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டனராம்.
இதையடுத்து ராஜபாண்டியன் என்ற ராஜா மற்றும் அவரது கூட்டாளி ஒருவரையும் போலீஸாா் கைது செய்து, அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் ராஜபாண்டியன் என்ற ராஜா அளித்த பிணை பத்திரத்தை மீறி செயல்பட்டதையடுத்து, அவருக்கு ஏற்கெனவே அளித்த நன்னடத்தை பிணையை ரத்து செய்து, பிணை பத்திரம் காலம் முடியும் நாளான 2021, நவ. 9ஆம் தேதி வரை காவலில் வைக்க கோட்டாட்சியரும், கோவில்பட்டி உட்கோட்ட நிா்வாக நடுவருமான சங்கரநாராயணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.