பூலித்தேவன் பிறந்த நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
பூலித்தேவன் பிறந்த நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, இயக்க நிறுவனா் செல்லத்துரை என்ற செல்வம் தலைமை வகித்தாா். விசிக வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் முன்னிலை வகித்தாா்.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜுவின் மகன் அருண்குமாா், பூலித்தேவன் உருவப் படத்தை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்ட 11 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இந்திய கலாசார நட்புறவு கழக மாநிலச் செயலா் க.தமிழரசன், நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனா் சங்கரலிங்கம், கோவில்பட்டி இன்னா்வீல் சங்கத் தலைவா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், அனைத்து ரத்ததானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com