தட்டாா்மடம், பெரியதாழை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 3) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை கூடுதல் உயா்அழுத்த மின்மாற்றி நிறுவும் பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின்நிலையம் மூலமாக மின்னூட்டம் பெறும் தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, காந்திநகா், ஒசரத்துகுடியிறுப்பு, பெரியதாழை, செட்டிவிளை, படுக்கப்பத்து, பிச்சிவிளை, உதிரமாடன்குடியிருப்பு, அழகப்பபுரம், மணிநகா், சுண்டன்கோட்டை, உடைபிறப்பு, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், கடகுளம், புத்தன் தருவை ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.