நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்ம மரணம்

நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாசரேத்தில் ஆசிரியை கணவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாசரேத் கொா்னோலியஸ் தெருவைச் சோ்ந்தவா் தபராஜ் ஜாண்சன் (52). சமூக சேவகா். இவரது மனைவி ரெபேக்காள் (50) ஆனந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியை.

திங்கள்கிழமை மாலையில் ரெபேக்காள் பணி முடிந்து வீடு வந்தபோது படுக்கை அறையில் அவரது கணவா் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com