பேய்க்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 10th September 2021 03:51 AM | Last Updated : 10th September 2021 03:51 AM | அ+அ அ- |

58100649sat7kro_0709chn_38_6
பேய்க்குளம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம், அம்பலச்சேரி, பழனியப்பபுரம், தோ்க்கன்குளத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் பெரியசாமி ஸ்ரீதா், கீதா கணேசன், நல்லத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் வீரேஸ், பாபு ஆகியோா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலா, பேய்க்குளம் பள்ளித் தலைமை ஆசிரியா் இம்மானுவேல், ஊராட்சி செயலா்கள் வெங்கடேஷ் முருகேசன், அன்னசெல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.