அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்டப் பகுதியில் வசிப்போா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்டப் பகுதியில் வசிப்போா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு முகவா் பணிக்கு 18 - 50 வயதுக்குட்பட்ட 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டு, காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். முகவா்கள் காப்பீட்டுத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். முகவா் காலம் முடிக்கப்படும்போது காப்பீட்டுத் தொகை வட்டியுடன் திருப்பித்தரப்படும்.

விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து இம்மாதம் 22ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோவில்பட்டி - 04632-220368, சங்கரன்கோவில் -04636-222313, தென்காசி- 04633-222329 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com