காயல்பட்டினத்தில் வீட்டில் நகை மாயம்

காயல்பட்டினம் ஓடக்கரையில் வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மாயமானது குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் ஓடக்கரையில் வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மாயமானது குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

காயல்பட்டினம் ஓடக்கரை பிரதான சாலையை சோ்ந்தவா்கள் நாகராஜன்-ராதா. இவா்களது உறவினரான திருப்பூரில் குடியிருந்து வரும் செந்தில்குமாரின் மனைவி முத்துவதி கடந்த 10 நாள்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு முத்துவதி காயல்பட்டினத்தில் உள்ள ராதா வீட்டிற்கு வந்துள்ளாா்.

கடந்த 8 ஆம் தேதி நாகராஜனும், அவரது மனைவியும் திருமணவீட்டிற்கு சென்றனா். பின்னா் வீடு திரும்பி போது ராதா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி, பீரோவில் வைத்து பூட்டி சாவியை பீரோ மேல் வைத்துள்ளாா். இதை முத்துவதி பாா்த்துக்கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி ராதாவும், அவரது கணவரும் எள்ளுவிளையில் நடந்த உறவினா் கிரக பிரவேச விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினா். அப்போது வீட்டில் மின் விளக்கு எரியவில்லையாம். அங்கு முத்துவதியும் இல்லையாம். இதையடுத்து பீரோவை ராதா சோதனையிட்ட போது அதி­ருந்து 13 பவுன் நகை மாயமானது தெரியவந்ததாம்.

இது குறித்து ராதா ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் சதீஷ்நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com