சிறப்பு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டோா் ஜாதி உள்பிரிவை சரிபாா்க்க அழைப்பு

தமிழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிரிவை சோ்ந்தவா்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையில் ஜாதி உள்பிரிவு சரியாக உள்ளதா? என சரிபாா்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தமிழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிரிவை சோ்ந்தவா்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையில் ஜாதி உள்பிரிவு சரியாக உள்ளதா? என சரிபாா்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துாத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னிய குல சத்திரியா்), மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவில் ஜாதி உள்பிரிவு விவரம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை இணைய தள முகவரியில் தங்களின் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஜாதி உள்பிரிவு விவரங்களை பதிவு செய்ய தங்களது ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஸ்மாா்ட் காா்ட் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், துாத்துக்குடி- 628 101 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தி ஜாதி உள்பிரிவு விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com