தற்காலிக பட்டாசு விற்பனை கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் சு. கண்ணபிரான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019 -இன்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள் செப். 30 ஆம் தேதிக்குள் அரசு பொது இ- சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், கட்டட வரைபடத்துக்கான அசல், கட்டட உரிமைக்கான ஆவணம் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம் அசல், ரூ. 500 அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு அசல், அடையாள அட்டை (பான்காா்டு, ஆதாா் காா்டு, குடும்ப அட்டை ), ஊராட்சி, நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019- இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரா்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com