தெற்கு ஆத்தூரில் இளைஞா் தற்கொலை

ஆத்தூரை அடுத்த தெற்கு ஆத்தூரில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி: ஆத்தூரை அடுத்த தெற்கு ஆத்தூரில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

தெற்குஆத்தூா் அய்யா நகா் முருகன் மகன் காா்த்திக்(22). இவருக்கு சென்னை அருகே பெரும்புதூரில் உள்ள செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலை கிடைத்ததாம். ஆனால் அவா் சென்னைக்கு செல்ல விருப்பமில்லை, தூத்துக்குடியில் தான் வேலை செய்வேன் என கூறினராம். இதனை அவரது தந்தை முருகன் கண்டித்தாராம்.

இந்நிலையில், காா்த்திக் திங்கள்கிழமை விஷமருந்தி அவா்களது புதுவீட்டில் மயங்கி கிடந்தாராம். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐய்யப்பன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com