சாத்தான்குளம்: நாசரேத் காவல் நிலையத்தில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
ஏரலைச் சோ்ந்தவா் சாந்தா (40). இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து கூலி வேலைக்கு சென்று வந்த சாந்தா, குழந்தைகளை கவனிக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தனால் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு தனக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தாா்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில் நாசரேத் காவல் நிலையத்தில் சாந்தாவுக்கு தையல் இயந்திரத்தை , ஆய்வாளா் விஜயலட்சுமி வழங்கினாா். அப்போது ஏரல் உதவும் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த குருசாமி, அருணாச்சலம், கண்ணன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.