ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சுமை வாகனத்திற்கு முன்பணம் செலுத்திவிட்டு நிலுவை தொகையை செலுத்தாத இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காயல்பட்டினம் லட்சுமிபுரம் அய்யாத்துரை மகன் மணிகண்டன்(23). இவருக்கு சொந்தமான சுமை வேனை கடந்த ஜூலை30 ஆம் தேதி வீரபாண்டியன்பட்டினம் , சவேரியாா் தெரு துளசி மகன் குமாா்(41), ரூ. 5லட்சத்து 75 ஆயிரத்துக்கு விலை பேசி, முன்பணமாக ரூ. 66 ஆயிரம் கொடுத்து விட்டு , மீதித் தொகை ரூ.5லட்சத்து 9 ஆயிரத்தை 15 நாள்களில் தருவதாக உறுதியளித்து, சுமை வேனை எடுத்துச் சென்றாராம். ஆனால் வாக்குறுதி அளித்தபடி குமாா் பணத்தை கொடுக்கவில்லையாம்.
இது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்துள்ளாா். உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.